Tuesday, November 28, 2023

Receiving Jesus: by the most unexpected


There were at least three unexpected personalities who joyously received the incarnate baby Jesus into the world.

Women Top the List 

Jesus did not consider it an ignominy to be born of the womb of a single virgin mother named Mary. The Holy Spirit enabled her to conceive in a miraculous manner with no man involved in the process. Around the same time there was Elizabeth, a barren woman more advanced in years. She was the wife of Zechariah, the priest. God blessed this senior couple by enabling Elizabeth to conceive. Both of these women could not come in public. Fear of the society gripped them. Elizabeth hid herself for five months in her house (Luke 1:24). Mary could not face the society as well. She was a prime target to be stoned to death as per law pertaining to a virgin conceiving. (Deuteronomy 22:20-21) 

Now it was a neat idea from God to make these women of ignominy, who were relatives as well, to meet and find comfort in one another. (Luke 1:39-45) When they both met, they did not cry and panic. They were Godly women of their times. Their fear changed to a bold faith. They joyously greeted one another filled with the Holy Spirit. The meeting of these women exemplifies inter-generational solidarity which is the need of the hour today. There is wisdom in both generations. What a blend! What a blessing!! 

An Unsung Young Hero 

With these two women there was the foetus, John who leaped in joy from inside of Elizabeth’s womb welcoming the other foetus, the incarnate Jesus. Interestingly Luke mentions John as a baby and not a foetus. (Luke 1:41,44) Luke, as a medical doctor knew the sanctity of life.  John was also filled with the Holy Spirit when he was a foetus. Did not David say, “Your eyes saw me when I was inside the womb. All the days ordained for me were recorded in your scroll before one of them came into existence.” (Psalm 139:16) Let us keep in mind that a foetus can leap in joy and a foetus is pained otherwise. 

Are we welcoming Jesus gladly into our hearts and homes? God honoured women of ignominy, both Mary and Elzabeth. Their children became popular and famous. How is our attitude to such women? Are foetuses cared for? Every foetus is a personality. Let us bring about a change in our society by honouring the neglected among us. Happy Advent!

Sunday, May 28, 2023

பெந்தெகொஸ்தே என்னும் ஆசீர்வாதம்

 


அப்போஸ்தலர் 2 இல் காணப்படும் பெந்தெகொஸ்தே நிகழ்வின் ஆசீர்வாதங்கள் சிலவற்றை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். 

ஒற்றுமை என்னும் ஆசீர்வாதம்

சங்கீதக்காரன் இவ்விதம் கூறுகின்றார்: இதோ, சகோதரர் ஒருமித்து வாசம்பண்ணுகிறது எத்தனை நன்மையும் எத்தனை இன்பமுமானது?... அங்கே கர்த்தர் என்றென்றைக்கும் ஆசீர்வாதத்தையும் ஜீவனையும் கட்டளையிடுகிறார். (சங்கீதம் 133) இங்கே பெந்தெகொஸ்தே நிகழ்வில்   120 விசுவாசிகள், ஒரே இடத்தில் கூடினர். (அப்போஸ்தலர் 1:15, 2:1) இயேசுவின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து ஒற்றுமையாக ஜெபித்துக்கொண்டிருந்த இந்த விசுவாசிகளின் குழுவினர் மேல் தான் ஜீவனுள்ள தேவனுடைய ஆவியானவர் இறங்க சித்தம் கொண்டார்  (அப்போஸ்தலர் 1:5, 14).  இரண்டுபேராவது மூன்றுபேராவது என் நாமத்தினாலே எங்கே கூடியிருக்கிறார்களோ, அங்கே அவர்கள் நடுவிலே இருக்கிறேன்” என்று இயேசு முன்பே சொல்லி இருக்கிறாரே. (மத்தேயு 18:20)

 அனைவரையும் உள்ளடக்கிய ஆசீர்வாதம்

பழைய ஏற்பாட்டு காலத்தில் கடவுளின் ஆவியானவர் தனி நபர்கள் மீது இறங்குவார். இங்கே முதன்முறையாக பரிசுத்த ஆவியானவர் யோவேலின் தீர்க்கதரிசனத்தை நிறைவேற்றும் வகையில் விசுவாசிகளான ஒரு கூட்டத்தினர் மீது இறங்கினார்: …அதற்குப் பின்பு நான் மாம்சமான யாவர்மேலும் என் ஆவியை ஊற்றுவேன்; அப்பொழுது உங்கள் குமாரரும் உங்கள் குமாரத்திகளும் தீர்க்கதரிசனஞ் சொல்லுவார்கள்; உங்கள் மூப்பர் சொப்பனங்களையும், உங்கள் வாலிபர் தரிசனங்களையும் காண்பார்கள். ஊழியக்காரர்மேலும் ஊழியக்காரிகள்மேலும், அந்நாட்களிலே என் ஆவியை ஊற்றுவேன். (யோவேல் 2:28,29) விசுவாசிகளின் இந்தக் கூட்டம் ஆண்களையும் பெண்களையும் உள்ளடக்கியதாய் இருந்தது. (அப்போஸ்தலர் 1:14) இது பெண்ணாகிய எனக்கு ஊக்கத்தை அளிக்கின்றது.

 அப்போஸ்தலனாகிய பேதுரு ஆண்கள் பெண்கள் மாத்திரம் அல்ல இறைவனின் முழு திருக்குடும்பத்தையும் இந்த ஆசீர்வாதத்தில் உள்ளடக்கியுள்ளார். நீங்களோ, உங்களை அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிக்கும்படிக்குத் தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாயும், ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாயும், பரிசுத்த ஜாதியாயும், அவருக்குச் சொந்தமான ஜனமாயும் இருக்கிறீர்கள். (1 பேதுரு 2:9)

 உலகளாவிய நற்செய்தி என்னும் ஆசீர்வாதம்

அன்றைக்கு அந்த 120 பேரால் பேசப்பட்ட பல மொழிகளாகிய அற்புத வரம் அங்கு ஆண்டவரால் ஆயத்தம் செய்யப்பட்டிருந்த பார்வையாளர்களுக்கு நற்செய்தியை பெற வழிவகுத்தது ஒரு அதிசயம் அன்றோ? கடவுளுக்குப் பயந்த யூதர்கள் வானத்தின் கீழுள்ள ஒவ்வொரு தேசத்திலிருந்தும் பெந்தெகொஸ்தே நிகழ்விற்காக அங்கே கூடியிருந்தனர். (அப் 2:.5) உலகமே அந்த 120 சீடர்களின் அருகாமையில் இருந்தது. மக்களுக்கு நற்செய்தியை பகிர்ந்து கொள்ள பல மைல்கள் பயணம் செய்யாமல் அங்கேயே நற்செய்தியை அறிவித்தது இன்றைய சூழலில் ஊடகங்களின் நல்ல பயன்பாட்டையே எனக்கு நினைவூட்டுகின்றது.

மொழிகள் என்னும் ஆசீர்வாதம்

இந்த யூதர்கள் பல தேசங்களிலிருந்து வந்தது மாத்திரமல்ல, இவர்கள் வெவ்வேறு மொழியியல் சூழல்களில் இருந்தும் வந்திருந்தனர்.

பார்த்தரும், மேதரும், எலாமீத்தரும், மெசொப்பொத்தாமியா, யூதேயா, கப்பத்தோக்கியா, பொந்து, ஆசியா, பிரிகியா,  பம்பிலியா, எகிப்து என்னும் தேசத்தார்களும், சிரேனேபட்டணத்தைச் சுற்றியிருக்கிற லீபியாவின் திசைகளிலே குடியிருக்கிறவர்களும், இங்கே சஞ்சரிக்கிற ரோமாபுரியாரும், யூதரும், யூதமார்க்கத்தமைந்தவர்களும், கிரேத்தரும், அரபியருமாகிய நாம் நம்முடைய பாஷைகளிலே இவர்கள் தேவனுடைய மகத்துவங்களைப் பேசக்கேட்கிறோமே என்றார்கள். (வ. 9-11) அப்போஸ்தலர் புத்தகத்தில் அந்நிய பாஷையின் வரம் இப்படியாக புரிந்துகொள்ளப்பட்ட ஒரே இடம் இதுதான்! இன்று நம் சூழலில் இப்படி ஒரு மொழி-அதிசயத்தை எப்படி மீண்டும் பெற முடியும்?

 கேமரூன் டவுன்சென்ட் ஒரு மிஷனரியாக கெளத்தமாலாவில் (Guatemala) பணிபுரிந்தபோது, ​​இந்த கேள்வியை அங்குள்ள ஒரு ஆதிவாசி தலைவர் கேட்டார்:  "உங்கள் கடவுள் மிகவும் பெரியவர் என்றால், அவர் ஏன் என் மொழியைப் பேசவில்லை?" இது டவுன்சென்டின் வாழ்க்கையை மாற்றியது.  டவுன்சென்ட் பைபிள்களை விற்கும் முயற்சியை கைவிட்டு, அந்த பழங்குடியினர் மத்தியில் வாழத் தொடங்கினார். அவர் அவர்களின் சிக்கலான மொழியைக் கற்றுக்கொண்டார், அதற்கு  எழுத்துக்களை உருவாக்கினார், இலக்கணத்தை பகுப்பாய்வு செய்தார், மேலும் புதிய ஏற்பாட்டை பத்து வருடங்கள் என்னும் குறிப்பிடத்தக்க குறுகிய காலத்தில் மொழிபெயர்த்தார்.

நாமும் இன்று மக்களின் தாய்மொழிகளில் வேதாகமத்தைக் கொடுப்பதன் மூலம் கடவுளின் செயலை மக்கள் அவரவர் மொழிகளில் அறிவிக்க உதவும் கருவிகளாக இருக்க முடியும்.

 திரள் கூட்டம் என்னும் ஆசீர்வாதம்

பெந்தெகொஸ்தே நிகழ்வின் போது பேதுருவின் பிரசங்கத்தின் விளைவு என்ன? அன்றையத்தினம் ஏறக்குறைய மூவாயிரம்பேர் சேர்த்துக்கொள்ளப்பட்டார்கள். (வ.41) அதன்பின் அப்போஸ்தலர் நடபடிகள் புத்தகம் விசுவாசிகளின் எண்ணிக்கையில் வளர்ச்சி, மற்றும் சபைகளின் பெருக்கம் பற்றி விவரிக்கின்றது.  விசுவாசிகளின் எண்ணிக்கைப் பெருக்கம் என்பது நம்  இறுதியான, உறுதியான ஆசீர்வாதமும் கூட!

 அப்போஸ்தலனாகிய யோவான் அந்த ஆசீர்வாதத்தைப் பற்றி இப்படியாக பதிவு செய்கிறார்: இவைகளுக்குப்பின்பு, நான் பார்த்தபோது, இதோ, சகல ஜாதிகளிலும் கோத்திரங்களிலும் ஜனங்களிலும் பாஷைக்காரரிலுமிருந்து வந்ததும், ஒருவனும் எண்ணக்கூடாததுமான திரளான கூட்டமாகிய ஜனங்கள், வெள்ளை அங்கிகளைத் தரித்து, தங்கள் கைகளில் குருத்தோலைகளைப் பிடித்து, சிங்காசனத்திற்கு முன்பாகவும் ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாகவும் நிற்கக்கண்டேன். (வெளிப்படுத்துதல் 7:9) பரிசுத்த ஆவியானவரின் அருளால் நாம் இந்த ஆசீர்வாதம் நிகழ காரணராக வேண்டும்.

மேற்கண்ட ஆசீர்வாதங்களைப் பெறவும், நம்மைச் சுற்றியுள்ள மக்களுக்கு நாம் ஆசீர்வாதமாக இருக்க வேண்டும் என்றும் நான் விரும்புகிறேன். இறை ஆசிக்காக வேண்டுகிறேன்

 

Thursday, April 6, 2023

தனிமை தேவ சித்தமல்ல!

தன்னை பத்து மாதம் சுமந்து பெற்றெடுத்த தாய் மரியாளின் முதல் பிள்ளையான இயேசு தன் பொறுப்பை, சிலுவையில், தன் வாழ்வின் இறுதியில் செயலாக்கம் செய்கின்றார்: அப்பொழுது இயேசு தம்முடைய தாயையும் அருகே நின்ற தமக்கு அன்பாயிருந்த சீஷனையும் கண்டு, தம்முடைய தாயை நோக்கி: ஸ்திரீயே, அதோ, உன் மகன் என்றார். பின்பு அந்தச் சீஷனை நோக்கி: அதோ, உன் தாய் என்றார். அந்நேரமுதல் அந்தச் சீஷன் அவளைத் தன்னிடமாய் ஏற்றுக்கொண்டான். (யோவான் 19:26,27) 


நமக்கும் இதே கட்டளை தான்: பிள்ளைகளே, உங்கள் பெற்றாருக்குக் கர்த்தருக்குள் கீழ்ப்படியுங்கள், இது நியாயம். உனக்கு நன்மை உண்டாயிருப்பதற்கும், பூமியிலே உன் வாழ்நாள் நீடித்திருப்பதற்கும், உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக என்பதே வாக்குத்தத்தமுள்ள முதலாங் கற்பனையாயிருக்கிறது. (எபேசியர் 6:1-3) 

இரண்டு கேள்விகள்

1. அவருக்கு சகோதரர், சகோதரிகள் உண்டே! ஏன் யோவான்? 

யாக்கோபு, யோசே, சீமோன், யூதா என்பவர்கள் இயேசுவின் சகோதரர் ஆவர்.  (மத்தேயு 13:55) குறைந்தது இரண்டு சகோதரிகள் அவருக்கு இருந்தனர் (மாற்கு 6:3). அவர்களைக் குறித்த மற்றுமொரு குறிப்பு:

 இவைகளுக்குப்பின்பு, யூதர்கள் இயேசுவைக் கொலைசெய்ய வகைதேடினபடியால், அவர் யூதேயாவிலே சஞ்சரிக்க மனதில்லாமல் கலிலேயாவிலே சஞ்சரித்துவந்தார். யூதருடைய கூடாரப்பண்டிகை சமீபமாயிருந்தது. அப்பொழுது அவருடைய சகோதரர் அவரை நோக்கி: நீர் செய்கிற கிரியைகளை உம்முடைய சீஷர்களும் பார்க்கும்படி, இவ்விடம்விட்டு யூதேயாவுக்குப் போம். பிரபலமாயிருக்க விரும்புகிற எவனும் அந்தரங்கத்திலே ஒன்றையும் செய்யமாட்டான்; நீர் இப்படிப்பட்டவைகளைச் செய்தால் உலகத்துக்கு உம்மை வெளிப்படுத்தும் என்றார்கள். அவருடைய சகோதரரும் அவரை விசுவாசியாதபடியால் இப்படிச் சொன்னார்கள். (யோவான் 7: 1-5)

காரணம்: அவர்கள் இன்னும் இயேசுவை அறிய வேண்டிய விதத்தில் அறிந்திருக்கவில்லை. 

 மேலும் இந்த வசங்களிலிருந்து கற்றுகொள்ளும் காரியம் ஒன்று உண்டு: திரள்கூட்டமான ஜனங்களும் அவருக்காகப் புலம்பி அழுகிற ஸ்திரீகளும் அவருக்குப் பின்சென்றார்கள். இயேசு அவர்கள் முகமாய்த் திரும்பி: எருசலேமின் குமாரத்திகளே, நீங்கள் எனக்காக அழாமல், உங்களுக்காகவும் உங்கள் பிள்ளைகளுக்காகவும் அழுங்கள். (லூக்கா 23:27-28)

இந்த வார்த்தைகள் மரியாளுக்கும் பொருந்தும். மரியாளும், குறிப்பாக யோசேப்பினால் அவள் பெற்ற மற்ற பிள்ளைகளும் முழு மனம் மாற்றம் பெற்றது கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலுக்கு பின்னர் தான். யாக்கோபு, யூதா என்னும் சகோதரர் அப்போஸ்தலர் பணி செய்து, அவர்கள் எழுதிய கடிதங்கள் தான் வேதத்தில் உள்ளன என்று கருதப்படுகிறது. 

 2. ஏன் ஸ்திரீயே (Woman) என்று அழைக்கிறார்? 

சிலுவையில் இயேசு தம் தாயை அவ்விதம் அழைக்கும் முன்னரே இந்த வேத குறிப்பு இருக்கின்றது: திராட்சரசம் குறைவுபட்டபோது, இயேசுவின் தாய் அவரை நோக்கி: அவர்களுக்குத் திராட்சரசம் இல்லை என்றாள். அதற்கு இயேசு: ஸ்திரீயே, எனக்கும் உனக்கும் என்ன, என் வேளை இன்னும் வரவில்லை. (யோவான் 2;3,4)

காரணங்கள்:

• மாதா வணக்கம் இருக்கக்கூடாது என்பதற்காகவோ? 

• 100 சதவீதம் மனிதன், 100 சதவீதம் தெய்வம் என்பதாலும் தான்! அவர் மனித குமாரனும், தேவ குமாரனுமாய் இருந்தார். 

• இயேசுவின் குடும்பத்திற்கான விளக்கமும் வித்தியாசமானதாக தான் இருந்தது. என்ன அது?

 இப்படி அவர் ஜனங்களோடே பேசுகையில், அவருடைய தாயாரும் சகோதரரும் அவரிடத்தில் பேசவேண்டுமென்று வெளியே நின்றார்கள். அப்பொழுது, ஒருவன் அவரை நோக்கி: உம்முடைய தாயாரும் உம்முடைய சகோதரரும் உம்மோடே பேசவேண்டுமென்று வெளியே நிற்கிறார்கள் என்றான். தம்மிடத்தில் இப்படிச் சொன்னவனுக்கு அவர் பிரதியுத்தரமாக: என் தாயார் யார்? என் சகோதரர் யார்? என்று சொல்லி,தம்முடைய கையைத் தமது சீஷர்களுக்கு நேரே நீட்டி: இதோ, என் தாயும் என் சகோதரரும் இவர்களே! பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவன் எவனோ, அவனே எனக்குச் சகோதரனும் சகோதரியும் தாயுமாய் இருக்கிறான் என்றார். (மத்தேயு12:46 -50)

இயேசுவின் குடும்பம் பெரியது! அகலமானது! 

தனிமை தேவ சித்தமல்ல! 

 • குழந்தை இயேசுவிற்கு தாய் மாத்திரம் தேவை அல்ல, ஒரு குடும்பமும் தான். இதற்காக  தூதன் யோசேப்பை ஆயத்தம் செய்தான். அவனும் கீழ்படிந்தான். 

• இவன் தச்சனுடைய குமாரன் அல்லவா? இவன் தாய் மரியாள் என்பவள் அல்லவா? என்று சொல்லும் அளவு யோசேப்பின் தகப்பன் என்னும் பங்களிப்பு சிறப்பாக இருந்திருக்கிறது. 

• அனாதை, வேசியின் பிள்ளை போன்ற சொற்றொடர்கள் இறைவனுக்கு பிடிக்காதவை. வேசியின் பிள்ளை என்று கருதப்பட்டு, எள்ளி நகையாடப்பட்ட யாபேசின் விண்ணப்பத்தை கர்த்தர் கேட்டு அவனை அதிகம், அதிகமாய் ஆசீர்வதித்தாரல்லவா? (1நாளாகமம் 4: 9,10) 

• விதவைகளுக்கும் பராமரிப்பு வேண்டும். எ. கா: ரூத்தின் சரித்திரம் 

• விதவைகள் மேல அக்கறை உள்ளவர் நம் தேவன்! பழைய, புதிய ஏற்பாட்டில் எத்தனை வசனங்கள் இது குறித்து வாசிக்கின்றோம்! 

• குடும்பங்களில் வயதான பெற்றோரை, குறிப்பாக, விதவைகளை (widowers too) கவனிப்பதும், பராமரிப்பதும் மிக அவசியம். 

• பெரிய குடும்பமாகிய சபை, சமுதாய குடும்பங்களும் தனித்திருப்போரை பராமரிப்பது மிக மிக அவசியம்.

இரண்டு  காரியங்கள்

திக்கற்ற பிள்ளைகளும் விதவைகளும் படுகிற உபத்திரவத்திலே அவர்களை விசாரிக்கிறதும், உலகத்தால் கறைபடாதபடிக்குத் தன்னைக் காத்துக்கொள்ளுகிறதுமே பிதாவாகிய தேவனுக்குமுன்பாக மாசில்லாத சுத்தமான பக்தியாயிருக்கிறது. (யாக்கோபு 1:27)

யாரை ஏற்றுக்கொள்ள போகிறோம்? யாரை விசாரிக்க போகிறோம் என்பதில்  நம் பக்தி அடங்கியுள்ளது.