Tuesday, June 25, 2013

"நான் ஆவிக்குரியத் திருச்சபைக்குச் செல்கின்றேன்!"

"நான் ஆவிக்குரியத் திருச்சபைக்குச் செல்கின்றேன்! நீங்கள் செல்வது ஆவிக்குரியத் திருச்சபை இல்லை" ‍‍என்பது கிறிஸ்தவ உலகில் நாம் அதிகம் கேட்கும் வார்த்தைகள் ஆகும். போதகர் ஒருவர் எனது உறவினர் திருமணமொன்றில் இவ்வாறுக் கூறக் கேட்டது என் மனதில் ஒரு உறுத்தலை உண்டாக்கியது: “மணமகனும், மணமகளும் ஆவிக்குரிய திருச்சபைக்கு செல்வது எனக்கு மகிழ்ச்சி தருகிறது.” அப்போதகர் மோதிரம் மாற்றி மாலை அணிவிக்கும் முந்தின நாள் நிகழ்வை நடத்த முன் வரவில்லை. ஆனால் அதிகம் நகைகளை அணிந்துக் கொள்ளும் கலாச்சாரமுடைய‌ அக்குடும்பங்கள் வாராவாரம் இப்போதகரின் சபைக்குச் செல்வதில் இவருக்கு ஆட்சேபணை ஒன்றும் இல்லாதது எனக்கு வியப்பை அளித்தது. ஆவிக்குரிய திருச்சபை என்ற வார்த்தைகள் என்னை ஆட்டிப்படைத்த நிலைமையில் மற்றொரு திருச்சபையில் நான் கேட்ட செய்தி எனக்கு வேண்டிய விளக்கத்தை தர ஏதுவாக இருந்தது.

வேதம் எதைக் குறித்து சொல்கின்றது? ஆவிக்குரியத் திருச்சபையா? ஆவிக்குரிய நபரா? ஆவிக்குரிய நபரைக் குறித்தே வேதம் ரோமர் 8 ல் விலாவாரியாக சொல்கின்றது. "மாம்சத்தின்படி நடக்கிறவர்கள் மாம்சத்துக்குரியவைகளைச் சிந்திக்கிறார்கள்; ஆவியின்படி நடக்கிறவர்கள் ஆவிக்குரியவைகளைச் சிந்திக்கிறார்கள்," என்று நபர்களைத் தான் வேதம் இரண்டு பிரிவாக பிரிக்கின்றது (வ. 5).

ஆவிக்குரிய நபர் யார்? 
1. ஆவிக்குரிய நபர்கள், கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டவர்களாயிருந்து, மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படியே நடக்கிறவர்கள். அவர்க‌ளுக்கு ஆக்கினைத்தீர்ப்பில்லை.(வ.1).

2. ஆவிக்குரிய நபர்கள் தேவனுக்குப் பிரியமாயிருப்பார்கள். “மாம்சத்துக்குட்பட்டவர்கள் தேவனுக்குப் பிரியமாயிருக்கமாட்டார்கள். ஆவிக்குப்பட்டவர்கள் தேவனுக்குப் பிரியமாயிருப்பார்கள்.” (வசனம் 8).

3. ஆவிக்குரிய நபர்கள் தேவனுடைய பிள்ளைகள். “மேலும் எவர்கள் தேவனுடைய ஆவியினாலே நடத்தப்படுகிறார்களோ, அவர்கள் தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறார்கள்.” (வ.14)

4. ஆவிக்குரிய நபர்கள் கிறிஸ்துவின் பாடுகளுக்குப் பங்காளிகள். “நாம் பிள்ளைகளானால் சுதந்தரருமாமே; தேவனுடைய சுதந்தரரும், கிறிஸ்துவுக்கு உடன் சுதந்தரருமாமே; கிறிஸ்துவுடனேகூட நாம் மகிமைப்படும்படிக்கு அவருடனேகூடப் பாடுபட்டால் அப்படியாகும்.” (வ.17)

5. ஆவிக்குரிய நபர்களைக் கிறிஸ்துவின் அன்பினின்று எவரும், எதுவும் பிரிக்க இயலாது. “கிறிஸ்துவின் அன்பைவிட்டு நம்மைப் பிரிப்பவன் யார்? உபத்திரவமோ, வியாகுலமோ, துன்பமோ, பசியோ, நிர்வாணமோ, நாசமோசமோ, பட்டயமோ? மரணமானாலும், ஜீவனானாலும், தேவதூதர்களானாலும், அதிகாரங்களானாலும், வல்லமைகளானாலும், நிகழ்காரியங்களானாலும், வருங்காரியங்களானாலும், உயர்வானாலும், தாழ்வானாலும், வேறெந்தச் சிருஷ்டியானாலும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிலுள்ள தேவனுடைய அன்பைவிட்டு நம்மைப் பிரிக்கமாட்டாது.” (வ. 36, 38)

மேற்கூறிய வழிகளில் ஒருவர் ஆவிக்குரியவராக வாழ‌த் திருச்சபை உதவக் கூடுமே தவிர, போதகரோ, மற்றவரோ தாங்கள் ஆவிக்குரியத் திருச்சபையை சார்ந்தவர்கள் என்று மார்தட்டிக் கொள்வது தவறானதாகும். உண்மை என்னவென்றால், வேதம் கூறும் ஆவிக்குரிய நபர்கள் /போதகர்கள் பல திருச்சபைகளில் பரவி இருக்கிறார்கள். ஆவிக்குரிய நபராய் வாழ்ந்து, ஆவிக்குரிய நபர்களைக் கண்டறிந்து, அவர்களோடு சாவகாசம் வைப்பதே கண்களால் காணக் கூடாத‌ "ஆவிக்குரியத் திருச்சபையில்" நாம் வைக்கும் ஐக்கியமாகும்!


Wednesday, June 12, 2013

Faith - Borrowing or Embracing?

All through history there have been two types of people, the ones who followed God and the ones who followed people of God. One classic example of this statement is seen in the lives of Abraham and Lot.

Abraham

Two things that characterized the life of Abraham were that he pitched tents and he built altars all through his sojourn on this earth. Tents are temporary places of dwelling, whereas altars in the context of Abraham literally meant the presence, providence and protection of God. The book of Genesis mentions the altars Abraham built in five occasions. We know that Abraham, a man living in the highest comforts of a highly civilized city, named Ur was called by God to be a nomad for his cause. It should have been a difficult choice to obey God that way. At Shechem which means “shoulder,” Abraham built his first altar, symbolically meaning that he left the burdens of his nomadic life on God’s shoulders (Genesis 12:7). At Bethel he built the next two. The first one was when he received the greatest of all promises, which was about a land and succeeding generations at a time when he had none of the two (12:8). Abraham built the next altar after returning from Egypt where he lied to Pharaoh for his own life. He thanks God for his faithfulness in spite of his wrong at the altar at Bethel (13:4). He built the fourth altar at Hebron after separation from Lot to whom he voluntarily gave a better choice of land (13:18). Hebron means alliance, partnership, symbolically Abraham meant preferring partnership with God than with people. The fifth one was at Moriah (chapter 22) where he unquestioningly obeyed God in sacrificing his precious son Isaac, the promised heir for whom he waited for years. Abraham’s life characterizes a closer walk with God in all of life’s circumstances.

Lot

Lot, nephew of Abraham and a co-sojourner with him had his own family, servants, cattle and properties. But we do not find a mention of him building an altar anywhere while following his uncle. But there are mentions of him pitching tents (13:12). While Abraham followed God worshipping the Lord by regularly building altars, Lot followed Abraham and probably stood at the altar his uncle built. In doing so he borrowed his uncle’s faith. We do not see Lot worshipping God directly. The result: Abraham walked by faith, Lot walked by his sight. While the former was a generous person, the latter was selfish and greedy. His highest concern for earthly life is seen in the choice of Sodom, the fertile place akin to Eden and Egypt. Abraham looked forward to heaven, a city built by God (Hebrews 11:10), while Lot looked at Sodom, the city built by people, which perished to flames. Abraham got his heir Isaac through a righteous life. Lot bore his heirs through an unexpected and unrighteous conduct with his own daughters. In not seeking God for himself, he lost his wife, daughters and his treasured property at Sodom. 

Borrowing faith from others leads to despair and ruin. We cannot borrow faith from our parents, spouses, children, pastor or any other spiritual giant. God looks for faith from every individual. He seeks a person who longs for God’s presence for himself/herself and their families. Though Lot is portrayed as a righteous man, as one who was distressed by the filthy lives of lawless men in Sodom (2 Peter 2:6-8), we need to look at the losses he encountered in his life. One good news however is that a heir of Lot, Ruth became the great grandmother of Jesus, God incarnate. This talks about a faithful God who loves us however faithless we prove to be! However we need to learn from Lot who though credited as righteous, lost precious people and things in life. Following God is to seek Him for myself, but not by borrowing anyone else’s faith. For all those who stand on their own faith, how often do we build our own altars? It is time to embrace our faith!


Note: I loved this message preached by my husband Suresh at Christalaya Koramangala and so published it here with his permission :)

Friday, June 7, 2013

நகரம், நரகம், நான்!

நகரம் என்பது நரகம் போன்றது என்று கருதுவது சரியா? நகரத்தில் வாழும் நான் என்ன செய்ய வேண்டும்? நம் நாட்டின் தலைநகரில் நடைபெற்ற பாலியல் பலாத்கார செய்தியைக் கேட்ட போது என்னுள்  ஒரு கேள்வி எழுந்தது. உடலை மறைக்கத் துணியும், உடனடி மருத்துவ உதவியும் தேவையான நிலையில் இப்பெண்  கதறிய போது ஏன் பலர் உதவாமல் ஒதுங்கிச் சென்றனர்? குளிரில் அவர்கள் உள்ளமும் உறைந்து கல்லாகிப் போய் விட்டதோ?

வேதத்திலுள்ள சட்டப் புத்தகம் சொல்லும் ஒருக் காரியம் என்னவென்றால், கிராம புறங்களில் நடைபெறும் பாலியல் குற்றங்களில் சம்பந்தப்பட்ட ஆண் மாத்திரமே தண்டிக்கப்படுவான். அதேக் குற்றம் நகரத்தில் நடைபெறும் போது ஆண், பெண் இருவருமே தண்டிக்கப்படுவர் . பட்டணத்தில் பெண் ஒருவள் கூக்குரலிடும் போது யாராவது வந்து உதவும் வாய்ப்பு உள்ளது . இருவரும் தண்டிக்கப்படும் போது, பெண் உதவிக்காக குரல் கொடுக்கவில்லை. இருவரும் குற்றத்தில் உடந்தை என்று பொருள். (உபாகமம் 22:23- 27). ஆபத்தில் ஒருவர் கதறும் போது, மற்றவர் உதவ வேண்டும் என்று அதிகம் பேர் வசிக்கும் நகர்புறங்களில் வாழ்வோரின் பொறுப்பை இவ்வசனங்கள் உணர்த்துகின்றது அல்லவா?

சோதோம் நகரம் பாலியல் ஒழுக்கக் கேடுகளுக்காக மட்டும் அழிக்கப்படவில்லை. "இதோ, கெர்வமும், ஆகாரத் திரட்சியும், நிர்விசாரமான சாங்கோபாங்கமுமாகிய இவைகளே உன் சகோதரியான சோதோமின் அக்கிரமம்; …சிறுமையும் எளிமையுமானவனுடைய கையை அவள் பலப்படுத்தவில்லை" (எசேக்கியேல் 16: 49) என்னும் வசனம் சோதோம் மகா நகர்வாசிகளின் பாவங்களை விவரிக்கின்றன.  பத்து நீதிமான்கள் இல்லாததால் சோதோம் நகரம் அழிக்கப்பட்டது. 

சோதோமில் பத்து நீதிமான்களைத் தேடின ஆண்டவர், எருசலேம் பட்டணத்தில் ஒரே ஒரு நல்ல ஆத்துமாவை தேடுகிறதைக் காண்கின்றோம்."நியாயஞ்செய்கிற மனுஷனைக் கண்டுபிடிப்பீர்களோ என்றும், சத்தியத்தைத் தேடுகிறவன் உண்டோ என்றும், எருசலேமின் தெருக்களிலே திரிந்துபார்த்து, விசாரித்து, அதின் வீதிகளிலே தேடுங்கள்; காண்பீர்களானால் அதற்கு மன்னிப்புத் தருவேன்." (எரேமியா 5:1) ஆபிரகாம், சோதோம் பட்டண மக்களுக்காக கெஞ்சி மன்றாடியது போல அழிந்து போகும் மக்களை பாதுகாக்க கர்த்தர் தமது அநாதித் தீர்மானத்தின்படி ஆபிரகாம் போன்றோரை இன்றும் வைத்துள்ளார்.  

ஆனால் ஒரு நகரம் அழிவிலிருந்து காப்பாற்ற‌ப்பட ஜெபித்தால் மட்டும் போதாது. நம்மில் பலர் நகரங்களில் வாழ்வதை விட சிற்றூர்களிலும் கிராமங்களிலும் வாழ்வதே சிறந்தது என்று எண்ணுவது போல‌வே நெகேமியாவின் காலத்திலும் மக்கள் எண்ணினர். எனவே பத்தில் ஒருவரை எருசலேம் நகரில் வாழ குலுக்கல் முறையில் தேர்வு செய்யும் சூழல் ஏற்பட்டது. எருசலேமிலே குடியிருக்க மனப்பூர்வமாய்ச் சம்மதித்தவர்களை ஜனங்கள் வாழ்த்தினார்கள் என்று வேதம் கூறுகின்றது (நெகேமியா 11:1‍‍-2). தேவனுடைய பிள்ளைகள் நகரங்களில் வாழ வேண்டியதன் அவசியத்தை இதன் வாயிலாக நாம் அறியலாம்.

நகரங்களில் வாழத் தீர்மானிப்பது முக்கியமானது.  அங்கு நல்லவர்களாக, உதவும் கரங்களாக வாழ்வது அதை விட முக்கியமானது.
நகரங்களில் அதிகம் பேர் வாழ்வதனால் தேவன் நகரங்களை அதிகம் நேசிக்கிறார். "வலதுகைக்கும் இடதுகைக்கும் வித்தியாசம் அறியாத இலட்சத்து இருபதினாயிரம்பேருக்கு அதிகமான மனுஷரும் அநேக மிருகஜீவன்களும் இருக்கிற மகா நகரமாகிய நினிவேக்காக நான் பரிதபியாமலிருப்பேனோ" என்பதே இன்று பெருநகரங்களைக் குறித்த இறைவனின் நாடித்துடிப்பு ஆகும்!

நாம் எந்த இடத்தில் வாழ வேண்டும் என்று நிர்ணயித்த தேவன் (அப்போஸ்தலர்  17:26), நகர்வாசிகள் எப்படி வாழ வேண்டும் என்று கற்றும் கொடுத்துள்ளார்.  பரலோகம், புதிய‌ எருசலேம். அது பரிசுத்த நகரம். அதை நாடும் ஒருவரின் பொறுப்பு என்ன? நரகத்தை நோக்கி அறியாமல் நடைபோடும் நகர மக்களுக்கும், உண்மையாகவே உதவி நாடுவோருக்கும் நாம் செய்யத் தவறியது என்ன? இனி செய்ய வேண்டியது என்ன?

இயேசு...நகரத்தைப்பார்த்து, அதற்காகக் கண்ணீர் விட்டழுதார். (லூக்கா 19:41)

"...பட்டணத்தின் சமாதானத்தைத் தேடி, அதற்காகக் கர்த்தரை விண்ணப்பம்பண்ணுங்கள்; அதற்குச் சமாதானமிருக்கையில் உங்களுக்கும் சமாதானமிருக்கும்" (எரேமியா 29:7)

Sunday, June 2, 2013

புறாவா? கழுகா? ‍- அதிர்ச்சிகளை மேற்கொள்வதில் நீங்கள் எந்த ரகம்?

எதிர்பாராத வியாதி, வேலை செய்யும் இடத்தில் மாற்றங்கள், மிகவும் நேசித்த ஒருவர் மரித்தது என்பவை வாழ்க்கையில் அதிர்ச்சியை ஏற்படுத்தும் நிகழ்வுகள். இவ்வதிர்ச்சிகளை ஒவ்வொருவரும் கையாளும் விதங்கள் வித்தியாசமானவை. "நீ மிருகங்களைக் கேட்டுப்பார், அவைகள் உனக்குப் போதிக்கும்; ஆகாயத்துப் பறவைகளைக் கேள், அவைகள் உனக்கு அறிவிக்கும்" (யோபு 12:7) என்னும் யோபுவின் சொல்லுக்கிணங்க வாழ்வின் கடினமான பாதைகளில் நாம் செய்ய வேண்டியது என்ன என்பது பற்றி, இரு பறவைகள் நமக்கு கற்றுக் கொடுக்கும் பாடங்களை இங்கு காண்போம்.

புறா ரகம் (சங்கீதம் 55)
இந்த‌ சங்கீதம் தாவீது ராஜாவின் ஒரு புலம்பல் பாடலாகும். அவனது மகனான அப்சலோம் சில வாழ்வின் திருப்பு முனைகளால் தந்தையின் பயங்கரமான விரோதியானான். அரண்மனையை விட்டு தாவீது வெறுங்காலோடு ஓடும்  அவசரமான சூழ்நிலை ஏற்பட்டது.அந்நாட்களில் அவனது நெருங்கிய நண்பன் ஒருவன் தாவீதை பரிகசித்து ஏளனம் செய்ததை இந்த சஙகீதத்தில் காணலாம். "என்னை நிந்தித்தவன் சத்துரு அல்ல, அப்படியிருந்தால் சகிப்பேன்; எனக்கு விரோதமாய்ப் பெருமைபாராட்டினவன் என் பகைஞன் அல்ல, அப்படியிருந்தால் அவனுக்கு மறைந்திருப்பேன். எனக்குச் சமமான மனுஷனும், என் வழிகாட்டியும், என் தோழனுமாகிய நீயே அவன். நாம் ஒருமித்து, இன்பமான ஆலோசனைபண்ணி, கூட்டத்தோடே தேவாலயத்துக்குப் போனோம்." இது அகித்தோப்பேலாக இருக்கக் கூடும் என்று வேத வல்லுனர்கள் கூறுகின்றனர். "என் பிராணசிநேகிதனும், நான் நம்பினவனும், என் அப்பம் புசித்தவனுமாகிய மனுஷனும், என்மேல் தன் குதிகாலைத் தூக்கினான்" (சங்கீதம் 41:9) என்று அகித்தோப்பேலைக் குறித்து மற்றுமொரு இடத்தில் தாவீது கூறுகின்றான். தாவீதின் மனநிலமை மேலும் பல சத்துருக்களால் பாதிக்கப்பட்டதைக் குறித்தும் 55 வது சங்கீதத்தில் 
காணலாம்.

தான் நம்பின தன் நண்பன் அகித்தோப்பேலே தன்னைக் கொல்லும் சதியை உளவர்கள் மூலம் கேட்ட போது (2 சாமுவேல் 17), தாவீது கண் கலங்கியிருப்பான். தன் உயிருக்காக ஓடும் போது தாவீதின் உணர்ச்சியின் உச்சக்கட்டம் இப்படியாக வெளி வந்தது என்று நான் நினைக்கிறேன்: "ஆ, எனக்குப் புறாவைப்போல் சிறகுகள் இருந்தால், நான் பறந்துபோய் இளைப்பாறுவேன். நான் தூரத்தில் அலைந்து திரிந்து வனாந்தரத்தில் தங்கியிருப்பேன். பெருங்காற்றுக்கும் புசலுக்கும் தப்பத் தீவிரித்துக்கொள்ளுவேன்.(வசனங்கள் 6 - 8) பிரச்சனைகள் இல்லாத இடம் இவ்வுலகில் ஒன்றில்லை என்பதை ஒரு கணம் மறந்து போகின்றான். இப்படி புறாவைப் போல சிறகடித்து தப்பி ஒளிக்க விரும்பும் அவன் சத்துருக்களை பழி வாங்கும் சொற்களால் வசை பாடுவதையும் காண்கின்றோம்.

ஆனாலும் தாவீது தன்னுடைய‌ எல்லா மன அங்கலாய்ப்பின் நடுவிலும், ஆணடவரை தேடுகிறதை பார்க்கிறோம். அதன் காரணமாக முடிவில் நல்ல வார்த்தைகளைப் பேசுகின்றான்: "கர்த்தர்மேல் உன் பாரத்தை வைத்துவிடு, அவர் உன்னை ஆதரிப்பார்; நீதிமானை ஒருபோதும் தள்ளாடவொட்டார்." (வசனம் 22). நாமும் நமது மனக் குமுறலின் நடுவில் புறாவைப் போல (சிலர் தற்கொலைக்கு முயற்சிப்பது இந்த இரகமே) ஓடித் தப்பிக்க முயலாமல், ஆண்டவரை நோக்கிப் பார்த்து அவர் மேல் பாரங்களை வைக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். "வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்." என்று தானே இயேசுக் கிறிஸ்துவும் கூறுகின்றார்! கர்த்தர் தாவீதிற்கு இரங்கி அவன் மீண்டும் ராஜாவாக செய்தார். அவனது மாய்மால நண்பன் அகித்தோப்பேல் தற்கொலை செய்து கொண்டான். தகப்பனுக்கு விரோதமாய் எழும்பிய அப்சலோமும் பரிதாபமாக மரித்தான்.

கழுகு ரகம் (ஏசாயா 40)
இஸ்ரவேல் மக்கள் பல முறை எச்சரிக்கப்பட்டும், மெய்யான தேவனை விட்டு விட்டு, வேறு தெய்வங்கள் பின் சென்றததால் இறுதியில் சிறைக் கைதிகளாக அவர்கள் அந்நிய நாட்டிற்குச் செல்லும் அவல நிலைமை ஏற்பட்டது. அப்படிப்பட்ட சூழலில் "என் வழி கர்த்தருக்கு மறைவாயிற்று. என் நியாயம் என் தேவனிடத்தில் எட்டாமல் போகிறது" என்று அவர்கள் தேவனிடம் முறையிடுகிறதை இங்கு காண்கின்றோம். மேலும் பிணைக் கைதிகளாக கஷ்டப்பட்ட‌ அவர்கள் சரீரத்திலும், ஆத்துமாவிலும் சோர்ந்து போனதால், அவர்களைப் பார்த்து மனமிரங்கி கர்த்தர் இவ்விதம் சொல்கின்றார்: "பூமியின் கடையாந்தரங்களைச் சிருஷ்டித்த கர்த்தராகிய அநாதி தேவன் சோர்ந்துபோவதுமில்லை, இளைப்படைவதுமில்லை; சோர்ந்துபோகிறவனுக்கு அவர் பெலன் கொடுத்து, சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிறார். இளைஞர் இளைப்படைந்து சோர்ந்துபோவார்கள், வாலிபரும் இடறிவிழுவார்கள். கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலன் அடைந்து, கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள்; அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்துபோகார்கள்." (ஏசாயா 40: 28-31)

சிறையிருப்பின் காலத்தில் வாழ்ந்த‌ தானியேல், சாத்ராக், மேஷாக், ஆபேத் நேகோ இந்த வாக்குத்தத்தங்களை தங்களுக்கு சொந்தமாக்கி கொண்டவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர். அவர்கள் சாதாரணமான உணவை உண்டாலும் மற்றவர்களைக் காட்டிலும் முகக் களையும், சரீர புஷ்டியும், சிறப்பான ஞான வரமும் பெற்றிருந்தனர். தேவனிடத்தில் வைத்த பக்தியின் நிமித்தம் சிங்க கெபிக்கும், அக்கினிச் சூளைக்கும் செல்ல நேரிட்டாலும் பாதிக்கப்படாதவர்களாக இருந்தார்கள். பிணைக் கைதிகளாக சென்ற‌ அதே நாட்டை ஆள்பவர்களாக மாறினார்கள். எதிரி எல்லையில் கழுகைப் போல சிறகடித்துப் பறந்தார்கள்.

தன் பழைய சிறகுகளையெல்லாம் ஒவ்வொன்றாக தானே பிடிங்கி எடுக்கும் ஒரு வேதனையான அனுபவத்திற்கு பின்னரே ஒரு கழுகின் பெலன் கூடுகின்றது. அது போலவே நமக்கு இன்பம் உண்டாக்கும் பாவங்களை விட்டு விடுவது வேதனையாய்த் தோன்றினாலும், அதுவே நமக்கு புது பெலனை அளிக்கும். தாவீது மற்றும் மேற்சொல்லப்பட்ட வாலிபர்கள் ‍ தங்கள் பாவ வாழ்வை அறிக்கையிட்டு (சங்கீதம் 51, தானியேல் 9) கர்த்தர் மேல் நம்பிக்கை வைத்து, அவரிடம் மன்றாடினது தான் இவர்கள் தங்கள் வாழ்வின் அதிர்ச்சி சூழ்நிலைகளிலிருந்து மீள வழி செய்தது. கர்த்தரிடத்தில் மன்னிப்பு பெற்று, ஜெபித்து அவர் வேளைக்காய் காத்திருக்கும் போது கழுகுக்கு சமானமாய் நமக்கு பெலன் கிடைக்கும். (சங்கீதம் 103:1-5)

என் வாழ்வில் எதிர்பாராமல் ஏற்படுகின்ற‌ மன அதிர்ச்சியை நான் எவ்வாறு மேற்கொள்ளுகின்றேன்? புறா போல் ஓடி ஒளித்துக் கொள்ளுகின்றேனா? அல்லது கழுகைப் போல செட்டை அடித்து பறக்கின்றேனா?