Tuesday, March 25, 2014

"நீ என் சகோதரரிடத்திற்குப் போய்,சொல்லு!" (மகதலேனா மரியாளின் வாழ்விலிருந்து)


மகதலேனா மரியாள், வேதத்திலுள்ள பெயர் சொல்லப்பட்ட ஒரு சில பெண்களுள் ஒருவள் ஆவாள். 14 முறை அவள் பெயர் சுவிசேஷங்களில் சொல்லப்பட்டுள்ளது. சுவிசேஷங்களில் மகதலேனா மரியாளின் பெயர் எப்பொழுதும் முதலில் காணப்படுகின்றது. உயிர்த்தெழுந்த ஆண்டவர் முதலாவதாக மகதலேனா மரியாளுக்குத் தான் காட்சி அளித்தார். அவள் "அப்போஸ்தலருக்கு அப்போஸ்தலர்" என்று அழைக்கபடுகின்றாள். சுவிசேஷங்கள் அவள் ஒரு தலைவியாக செயல்பட்டிருக்க வேண்டும் என்பதை எடுத்து இயம்புகின்றது.

அவளின் கதை
"மகதலா" என்னும் சிற்றூரிலிருந்து அவள் வருவதால் அவள் மகதலேனா மரியாள் என்று அழைக்கப்பட்டாள். அவளுடைய இளம் வயதில் அவள் ஏழு பிசாசுகளினால் அலைகழிக்கப்பட்டாள். லூக்கா 8:1-3 ல் அவளைப் பற்றி நாம் வாசிக்கின்ற வேத பகுதி பாவியான ஸ்தீரியின் கதையைத் தொடர்ந்து வருவதால், பலர் மகதலேனா மரியாளை "திருந்திய வேசியாக" காண்கின்றனர். பிசாசு பிடித்திருப்பதும், ஒரு பெண்ணின் பாவமும், பாலுறவுக்கடுத்த தவறான செயலுக்கு சம்பந்தப்பட்டிருக்க வேண்டும் என்று அவசியமில்லை. அவமானத்தின் பாத்திரமாயிந்த அவளை இயேசுவின் அன்பு தொட்டதால் அவரின் வல்லமை விளங்கும் விலையுயர்ந்த ஆபரணமானாள். மகதலேனா மரியாள் இயேசுவை பின்பற்றத் தொடங்கினாள். அவளும் ஒரு பெண்கள் குழுவும் தங்கள் ஆஸ்திகளால் அவருக்கு ஊழியஞ்செய்து வந்தனர்.

மகதலேனா மரியாள் இயேசுவின் சிலுவை வரை அவரைப் பின் தொடர்ந்தாள். ஆனால் அனைவருமே ஆண்களாயிருந்த அவருடைய 12 சீடரோ அதை செய்யவில்லை. மேலும் முதன்மையிலிருந்த இரண்டு சீடரான பேதுருவும் யோவானும் இயேசுவின் கல்லறையில் அவரைக் காணாது தோல்வியுடன் வீட்டிற்கு சென்றனர் (யோவான் 20:3 9). ஆனால் மகதலேனா மரியாளோ தனிமையில் விடாமுயற்சியோடு அங்கேயே காத்திருந்தாள். எனவே அவளோடு பேச கடவுள் தூதர்களை அனுப்பினார். ஆனால் அதை விட அதிர்ச்சியும் ஆனந்தமும் அவளுக்குக் காத்திருந்தது. உயிர்த்த இயேசு அவளுக்குத் தோன்றினார்! இன்னும் ஒரு முறை அவளை இழக்க விரும்பாத அவள் அவரைப் பற்றிக் கொள்ள விரும்பினாள். ஆனால் அவரோ, "என்னைத் தொடாதே, நான் இன்னும் என் பிதாவினிடத்திற்கு ஏறிப்போகவில்லை; நீ என் சகோதரரிடத்திற்குப் போய், நான் என் பிதாவினிடத்திற்கும் உங்கள் பிதாவினிடத்திற்கும், என் தேவனிடத்திற்கும் உங்கள் தேவனிடத்திற்கும் ஏறிப்போகிறேன் என்று அவர்களுக்குச் சொல்லு." என்றார் (யோவான் 20:17) அவருடைய சீடர்களோ மகதலேனா மரியாளின் கூற்றை நம்பவில்லை (மாற்கு 16 11). இயேசு அவருடைய ஆண் சீடருக்கும் அதன் பின்னர் தரிசனம் ஆனார். ஆனால் அவரை அவர்கள் நம்பாமற்போனதினிமித்தம் அவர்களுடைய அவிசுவாசத்தைக்குறித்தும் இருதயகடினத்தைக்குறித்தும் அவர்களைக் கடிந்துகொள்ள வேண்டியிருந்தது (வ. 14).

இயேசு உயிரோடு எழுந்தபின் உள்ள நிகழ்வுகளை நான்கு சுவிசேஷங்களை எழுதினவர்களும் சற்று வித்தியாசமாக விவரித்திருந்தாலும், அவர்கள் அனைவருமே மகதலேனா மரியாள் உயிர்த்த இயேசுவை சந்தித்ததிலும் மற்றவர்களுக்கு அவள் அதை சொன்னதிலும் அவளுக்கிருந்த மையப்பங்கை ஒத்துக் கொள்கின்றனர். அப்போஸ்தலர் முதல் இரண்டு அதிகாரங்களில் குறிப்பிடப்பட்டுள்ள பெந்தகோஸ்தின் நாளில் இருந்த 120 சீடர்களுள் பெண்களும் இருந்ததால், அக்கூட்டத்தில் மகதலேனா மரியாளும் இருந்திருப்பாள் என்று நம்பப்படுகின்றது.

மகதலேனா மரியாள் ஒரு சுவிசேஷகியாக பணிபுரிந்து பிரான்ஸ் தேசம் வரை நற்செய்தி எடுத்துச் சென்றாள் என்று பாரம்பரியம் கூறுகின்றது. இன்று நாம் தெரிந்து கொள்ளும் சத்தியமும் நற்செய்தியும் என்னவென்றால்: மகதலேனா மரியாள் வாழ்வில் செய்தது போல நம்மொருவர் வாழ்விலும் சகோதரருக்கு இணையாக சகோதரிகள் ஊழியம் செய்ய‌ அதிகாரம் கொடுப்பவர் இயேசுவே! இந்தியாவிலுள்ள நகர்களிலும், கிராமங்களிலும் உயிர்த்த இயேசுவைக் குறித்து சொல்லும் ஆவிக்குரிய கட்டளையை நாம் எல்லோருமே பெற்றிருக்கிறோம். மற்றொருவர் நமக்கு இந்த அதிகாரத்தை கொடுக்க வேண்டும் என்று நாம் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆண்டவர் நம்மைப் பார்த்து சொல்வதெல்லாம், "நீ என் சகோதரரிடத்திற்குப் போய்,சொல்லு!" என்பதே! செய்வோமா?

Friday, March 7, 2014

மகளிரின் மாட்சி

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8 "உலக மகளிர் தினமாக" கொண்டாடப்படுகிறது. ஆண் பெண் சமத்துவத்தை நினைவுப்படுத்தும் தினமாக இதுக் கொண்டாடப்படுகிறது. பெண்கள் நாட்டின் கண்கள் என்றும் குடும்பத்தின் குத்து விளக்குகள் என்றும் அழைக்கப்படுகின்றனர். ஆனால் உண்மை என்னவென்றால் அநேக பெண்கள் குடும்பத்திலும் சமுதாயத்திலும் பலாத்காரமாகவும், மெளனமாகவும்  அவதிக்குள்ளாகின்றனர். மகளிரின் மாட்சிக் குறித்து அறிவில்லாமையே இதற்கு காரணமாகவும் அமைந்து விடுகிறது. வேதம் இதைக் குறித்து சொல்வது என்ன?

குடும்பத்தில் சமம்
 தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார், அவனைத் தேவசாயலாகவே சிருஷ்டித்தார்; ஆணும் பெண்ணுமாக அவர்களைச் சிருஷ்டித்தார். "...பூமியின்மேல் நடமாடுகிற சகல ஜீவஜந்துக்களையும் ஆண்டுகொள்ளுங்கள்" என்று சொல்லி, தேவன் அவர்களை ஆசீர்வதித்தார். (ஆதியாகமம் 1:27-28). எனவே ஆதாம் ஏவாள் இருவருமே இறை படைப்பின் மகுடமாவர். கீழ்படிவதற்கான முதல் கட்டளை ஆதாமுக்கு மட்டுமே கொடுக்கப்பட்டது. இதில் கருத்து பரிமாற்றம் எப்பொழுது, எவ்வாறு தவறினது என்று நாம் அறியோம். சாத்தானின் வலையில் இருவருமே வீழ்ந்தனர். இருவரும் பாவம் செய்து, இருவரும் தண்டிக்கப்பட்டனர். "உன் ஆசை உன் புருஷனைப் பற்றியிருக்கும், அவன் உன்னை ஆண்டு கொள்ளுவான்" என்றும் தேவன் ஏவாளிடம் கூறினார் (3:16). அதை சொல்வதற்கு முன்பே சர்ப்பத்தைப் பார்த்து ஸ்திரீயின் வித்தானக் கிறிஸ்து பிசாசின் தலையை நசுக்குவார் என்ற நம்பிக்கை (வ.15) வித்தையிடுகின்றார்.

சொத்தில் சமம் 
யோபுவின் பின்னாட்களில் அவனுக்குப் பிறந்த மூன்று பெண் பிள்ளைகளுக்கும் அவர்கள் சகோதரரின் நடுவிலே சுதந்தரம் கொடுத்தான் என்று வேதம் கூறுகின்றது (யோபு 42:16). செலொப்பியாத் வனாந்தரத்தில் மரித்ததால் அவன் குமாரத்திகளான செலொப்பியாத்தின் குமாரத்திகளாகிய ம‌க்லாள் திர்சாள் ஒக்லாள் மில்காள் அவர்களுக்கு சகோதரர் இல்லாததினாலே, அவர்கள் தகப்பனுடைய சகோதரருக்குள்ளே அவர்களுக்குக் காணியாட்சி கொடுக்கவேண்டும் என்று கேட்டார்கள். இதைக் குறித்து கர்த்தரிடம் கேட்ட போது அந்த பெண்களின் வேண்டுகோளுக்கு அவர் இணக்கம் தெரிவித்ததோடு,  இஸ்ரவேலருக்கு அதை ஒரு உடன்படிக்கையாகவும் கொடுத்தார் (எண்ணாகமம் 27:1‍-8). நம் நாட்டில் வரதட்சணைக் கொடுமையால் சந்தோஷத்தையும், சமாதானத்தையும், உயிரையுமே இழந்த பெண்கள் அநேகர். கர்த்தர் கொடுத்த உடன்படிக்கைகளை பின்பற்றி, நம் குடும்பங்களில் ஆண் மக்களுக்கும் பெண் மக்களுக்கும் சமமாக சொத்தைக் கொடுத்தால், வரதட்சணைக் கொடுமையிலிருந்து மீள வழி உண்டு.

ஊழியத்தில் சமம்
தங்கள் பாவ வழிகளிலிருந்து மனந்திரும்புகின்ற ஜனங்களைப் பார்த்து கர்த்தர் கொடுக்கின்ற வாக்குத்தத்தம்: "நான் மாம்சமான யாவர்மேலும் என் ஆவியை ஊற்றுவேன்; அப்பொழுது உங்கள் குமாரரும் உங்கள் குமாரத்திகளும் தீர்க்கதரிசனஞ் சொல்லுவார்கள்;....ஊழியக்காரர்மேலும் ஊழியக்காரிகள்மேலும், அந்நாட்களிலே என் ஆவியை ஊற்றுவேன்."(யோவேல் 2:28-29)பழைய ஏற்பாட்டில் மிரியாம், தெபோராள், உல்தாள் போன்ற பெண் தீர்க்கர்களைக் குறித்து வாசிக்கின்றோம். புதிய ஏற்பாட்டில் பிலிப்புவின் ஐந்து குமாரத்திகளுமே தீர்க்கதரிசனம் உரைத்தாக வாசிக்கின்றோம். பிரச்சனைகள் நிறைந்த கொரிந்து திருச்சபையிலும், பெண் தீர்க்கர் இருந்தார்கள் (1 கொரிந்தியர் 14:34-35). அதே வரிசையில், அறுப்பு அதிகமுள்ள இந்திய சூழலில் ஆண்களும் பெண்களும் இணைந்து இறைபணியில் ஈடுபடும் தேவை உள்ளது.


கடவுளின் மீட்பின் திட்டத்தில் அவர் நமக்கு சொல்வது என்ன? "யூதனென்றும் கிரேக்கனென்றுமில்லை, அடிமையென்றும் சுயாதீனனென்றுமில்லை, ஆணென்றும் பெண்ணென்றுமில்லை; நீங்களெல்லாரும் கிறிஸ்து இயேசுவுக்குள் ஒன்றாயிருக்கிறீர்கள்." (கலாத்தியர் 3:28). மத்தேயு 22:30ன் பிரகாரம் பரலோகத்தில் ஆண்களும் பெண்களும் தூதரைப் போலிருப்பர். எனவே வேதம் துவக்கம் முதல் முடிவு வரை ஆண் பெண் சமத்துவத்தை தீர்க்கமாக உரைக்கின்றது. எனவே நம் குடும்பங்களிலும், சபைகளிலும், சமுதாயத்திலும் பெண்களை மதிக்க கற்றுக் கொள்ள வேண்டும். நம் தலைமுறையில் நம் வசம் உள்ளவரை இருபாலரும் ஒருவரையொருவர் மதிக்க கற்றுத் தர வேண்டும். அப்பொழுது தான் நாம் முன்னேறிய இந்தியராகவும், இறைவன் விரும்பும் சமுதாயமாகவும் மாற இயலும்.

Women of Worth! (WOW!)

March 8 of every year is celebrated as the “World Women’s Day.” This is celebrated to remind us that women have equal rights with men. Women are called as the “Eyes of a Nation” and as “Light of a Family.” But unfortunately many women suffer silently in families and society. What does the Bible say about equal rights to women?

Equal in Family
So God created humankind in his image, in the image of God he created them; male and female he created them. God blessed them, and God said to them and gave them both dominion over the earth (Genesis 1:27-28). In the order of creation, he created Adam and Eve last and they were the crown of all creation (2:18-24). The first command was given to Adam when Eve was not yet created (2:16-17). We do not know when and where the communication process failed. But both fell prey to Satan’s scheme. Both sinned. Both received punishment. Eve was told that her desire shall be for her husband and that Adam will rule over her (3:16). In that same line of punishments God gives a promise about the offspring of a woman who will crush the head of Satan (V.15).

Also Galatians 3:13 says that Christ has redeemed families from the curse of the law by becoming a curse for them. Therefore no one can dominate in a family relationship. Christ is the head of a family. Both love and obedience expected in a family relationship are virtues of Christ himself (John 3:16, Philippians 2:8). A husband and wife are called to reflect these Godly traits in a family relationship (Ephesians 5:21-33). A man and woman are therefore equal in a family relationship. Many problems in families today would solve if only we respect women in par with men in families. 

Equal in Inheritance
Job after restoration had three daughters named Jemima, Keziah and Keren-happuch and the Bible adds that he gave them inheritance along with their brothers (Job 42: 14-15). Zelophehad lived in the time of Moses and died in the wilderness. He had five daughters Mahlah, Noah, Hoglah, Milcah, and Tirzah and no sons. The daughters went to Moses and asked for possession among their father’s brothers. Moses enquired the Lord for their case. He not only acknowledged their desire to give their father’s inheritance, but also made it as a statute and ordinance for the Israelites (Numbers 27:1-8).

Dowry harassment is one big evil leading to loss of peace and happiness, sometimes also to loss of lives too in our nation. Following the ordinance of the Lord in giving equal inheritance to sons and daughters alike might help finding a solution even for this prevalent evil in the society.

Equal in Ministry
Prophet Joel tells to a group of people who repent from their evil ways this promise: "And afterward, ​I will pour out my Spirit on all people. ​Your sons and daughters will prophesy, ​your old men will dream dreams, ​your young men will see visions. Even on my servants, both men and women, ​I will pour out my Spirit in those days.” (Joel 2:28-29). In Old Testament we read about prophetesses Miriam, Deborah and Huldah. In New Testament we have the mention of five daughters of Philip who were prophetesses. In the controversial Corinthian church too, there were women prophets (1 Corinthians 14:34-35). In the same line, in the bountiful harvest scenario in India, we need both women and men to serve equally.

In the salvation plan of God, “There is neither Jew nor Greek, slave nor free, male nor female, for you are all one in Christ Jesus (Galatians 3:28). Matthew 22:30 says that in heaven both men and women would live like angels. So Scripture emphasizes equality of both men and women consistently from beginning to end. So the let us learn to respect women in our families, society and church. Let us bring up the generation in our influence to respect either sexes with respect and dignity. This would enable us to see us better Indians and as a community God wants us to be.